2 நவம்பர், 2010

பணிச்செயல் முறை உருவான கதை


கணினி மென்பொருள் கூறுகளால் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அதில் பணிகளை செய்து முடிப்பதற்கு செய்நிரல்கள் (Programs) அவசியப்பட்டன.இதன்போது தலைமுறைக்கு தலைமுறை பல கணினி மொழிகள் உபயோகிக்கபட்டன.இருந்த போதிலும் இவ்வாறு கணினி மொழிகளால் அறிவுறுத்தப்படும் நிலைகளின் போது கணினியில் பொதுவானதொரு தளமேடை காணப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.இதன் போதே கணினி இயக்கமுறைமைகள் (Operating Systems) உருவாக்கப்பட்டன.ஆரம்பகாலத்தில் DOS எனப்படும் Disk operating system மாத்திரமே
Operating systemஆக பாவிக்கப்பட்டது.பின்னாளில் கணினிகளின் சாரளத்தை (Windows) தமது கைகளில் பெற்றுக் கொண்ட Microsoft நிறுவனம் காலத்துக்கு காலம் நவீன உத்திகளை கொண்ட புதிய Operating systemகளை வெளியிடுவதில் இன்றுவரை ஊக்கமாக செயல்பட்டுவருகிறது.Microsoft மூலம் வெளியிடப்பட்ட OSகளாக Windows3.X,Windows95,Windows NT Workstation,Windows98,Windows2000Professional,Windows Me,Windows XP Home Edition,Windows XP Professional Edition,Windows Vista மற்றும் Windows 7 (வரும் ஆண்டு Windows 8) போன்றவற்றை
குறித்து காட்டலாம்.Apple கணினிகளுக்கு வேறாக MAc OSX எனும் முறைமையும் வெளிவந்தது.ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் Open Source பக்கம் அதிக கவனத்தை செலுத்தியிருப்பதனால் Linux வகையில் அமைந்த OSகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

Share With your friends