6 ஜூலை, 2010

உலகை ஆளும் GSM

கையடக்கத்தொலைபேசிகளின் உயிர்ப்பான தொழில்நுட்பமாக விளங்கும் ஜீ.எஸ்.எம் தனது 20வது ஆண்டுபூர்த்தியை கொண்டாடுகிறது.1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம்திகதி உலகின் 15தொலைபேசி கம்பனிகள் Global System for Mobile எனும் Gsm தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்லிட வலையமைப்பை
உருவாக்குவதற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.
GSM ஒன்றியத்தின் தகவல் படி GSM தொழில்நுட்பமானது உலகளவில் 2.5பில்லியனுக்கும் அதிகமான கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் செல்பேசிகளின் வியாபிப்பானது தீவிரமாக இடம்பெற்று வருவதனால் GSM தொழில்நுட்பம் மிகவும் வினைத்திறனானதென்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.1987ம் ஆண்டுசெய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக புதிய தொழில்நுட்ப அடைவை கொண்ட செல்பேசிகளின் வியாபிப்பு
மிகத்தீவிரமாக உயர்ந்துள்ளதாக GSM ஒன்றியத்தின் தலைவர் ரொபர்ட் கொன்வே (Robert conway) குறிப்பிடுகின்றார்.இன்றளவில் மனிதனின் வாழ்வில் கட்டாயம் இருக்கவெண்டிய ஒரு சாதனமாக செல்பேசிகள் மாறியுள்ளதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது.பிரிட்டனில் Oxfam எனும் நிறுவனத்தால் 2006ம் ஆண்டின் இறுதி
பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் படி பிரிட்டனில் 100 பேருக்கு 116.6செல்பேசி இணைப்புகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமா,முதல் ஒரு பில்லியனில் செல்பேசி இணைப்புக்கள் உலகளவில் வியாபிக்க 12வருடங்கள் எடுத்ததாகவும் அது 2பில்லியன்களாக வியாபிக்க வெறும் 30மாதங்களே எடுத்ததாகவும் GSM ஒன்றியத்தின் புள்ளிவிபரங்கள் சுட்டிநிற்கின்நன.அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் செல்பேசிகள் இன்றியமையாத கூறாக தீவிரமாக
மாறியுள்ளது கவனிக்கப்பட வேண்டியதாகும்.இதற்கு செல்பேசிகள் அலிவு விலையில் கிடைப்பதும் செல்பேசி இணைப்புக்கள் கவர்ச்சிகரமான விதவித வகைகளில் செல்பேசி வலையமைப்பு நிறுவனங்களால் குறைந்த விலையில் வழங்கப்படுவதும் காரணங்களாக இருக்கின்றன..எதிர்காலத்தில் செல்பேசிகளின் வலையமைப்புக்கள் வேகமாக
கப்பட்டும் அவை செயற்கை நுண்ணறிவு கொண்ட நிலையில் பாவனைக்கு வரக்கூடிய சாத்தியங்களும் அதிகளவில் உள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எதிர்காலமென்பது செல்பேசிகள் தொடர்பில் வித்தியாசங்களையும் வினோதங்களையும் கொண்டனவாக அமையுமென்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.Mobile brodband எனும் தொழில்நுட்பமும் இந்நாட்களில் முன்னேறி வருவதை அவதானிக்க முடிகிறது.இதன்விளைவாக வேகமான இணைய இணைப்பை இலகுவாகப்
பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை எல்லோருக்கும் விரைவில் ஏற்படுத்தி தரலாம்.செல்பெசிகளை பொருத்தமான நேரத்தில் பொருத்தமாக பயன்படுத்தல் தொடர்பில் நாம் எம்மை புடம்போட்டு கொள்ளுதல் காலத்தின் தேவையே!.....

Concepte By
A.Shanojan

கருத்துகள் இல்லை:

Share With your friends