2 ஏப்ரல், 2014

பேஸ்புக் ப்ரைவசி (Privacy) சில ஆலாசனைகளும் வழிகாட்டல்களும்


மனிதகுல வரலாற்றில் கணினி, இணையம் இவை இரண்டினதும் கண்டுபிடிப்பு தகவல் தொடர்பாடலை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித இனத்தையுமே பலமடங்கு முன்னேற்றியிருக்கிறது. சில சமயங்களில் அவை முறையாக பயன்படுத்தப்பட தவறுகிற போது சமூகத்தில் எதிர்விளைவுகளையும் தோற்றுவிக்கின்றன. அதிலும் எமது நாடு போன்ற கீழைத்தேயங்களில் எவ்வளவுதான் படிப்பறிவு உயர்ந்திருந்தாலும் இவ்வாறு தொழில்நுட்பம், கணினி, இணையம் என்று வருகின்ற போது 2/4 பகுதியினர் இன்றுவரை தெளிவற்ற/முறையற்ற பயன்பாட்டையே கொண்டிருக்கின்றனர். இங்கு நான் குறிப்பிடுவது புதிய தொழில்நுட்பங்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்ற உங்கள அறிவு மட்டத்தை அல்ல. ஒருவருக்கு கணினியில் தட்டச்சு செய்ய மட்டும்தான் தெரியும் என்றால் அதில் எந்த தவறுமில்லை. ஆனால் தெரிந்த அந்த விடயத்தை அவர் எந்தளவு தனக்கும் பிறர்க்கும் நன்மையுள்ளவாறு பயன்படுத்துகிறார் என்பதில் இருக்கிறது அவருடையதும் தொழில்நுட்பத்துடையதுமான வெற்றி. 



இன்றைய வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினர் சிறப்பானவர்கள், திறமைசாலிகள் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல, இவற்றோடு தொழில்நுட்பம் என்ற பாரிய சக்தியும் அவர்களிடம் இருக்கிறது. இது எங்கள் முன்னோர்களின் உழைப்பால் விளைந்தவை, இவை எங்களை வளப்படுத்தவும் எமக்கு பின் வருகிறவர்களை வழிகாட்டவும்தான் பயன்படவேண்டுமே தவிர எங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ள அல்ல. இனி 'பேஸ்புக்', இந்தச்சொல்லை தெரியாத இளையவர்கள் மட்டுமல்ல யாருமே இல்லை என்றளவுக்கு இது பிரபலம். சாதாரண இணையதளமாக உருவாகி இன்று மாபெரும் இணைய ஊடகமாக (cyber media) வளர்ந்திருக்கிறது. நாமனைவரும் இதை ஒவ்வொருவிதமாக பயன்படுத்துகிறோம். ஆனால் எங்களில் எத்தனை பேர் அதை சரியான முறையில் அதிலுள்ள Optionகளை சரியாக பயன்படுத்துகிறோம் என்றால் குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் பேஸ்புக்கில் உள்ள Tag என்ற வசதி மற்றவர்களுக்கு புகைப்படங்களை அனுப்புவதற்க்குதான் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அப்படியல்ல. நீங்கள் பேஸ்புக் பயன்படுத்த வேண்டுமா? இல்லலையா, எப்படி கணக்கு திறப்பது?, ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது எப்படி? என்று இங்கு சொல்லமுடியாது. ஆனால் எங்கள் பேஸ்புக் பாவனைக்கு சவாலாயிருக்கின்ற இநத Privacy பற்றி சொல்லித்தரலாம். அப்படியாவது இலங்கையில் கடந்த சில வாரங்களில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களையும், இலங்கையில் முற்றாக பேஸ்புக் தளத்தை தடைசெய்ய வேண்டும் என்ற கோஷத்தையும் தவிர்க்கலாம் அல்லவா? 

பேஸ்புக் இன்று இரண்டு பிரதான நோக்கத்திற்காக பாவிக்கப்படுகிறது.
  1. சாதாரணமாக தனிநபரொருவர் தனது நண்பர்கள் உறவுகளோடு உறவாடவும் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துதல்.
  2. ஒரு நிறுவனமோ/அமைப்பொன்றோ தங்களது நடவடிக்கைகள் விளம்பரப்படுத்தல்கள் மற்றும் பாவனையாளர்களுடனான தொடர்புகளை மேற்கொள்ளவும் பயன்படுத்துதல்.  
இதன் மூலமாக வெறுமனே நட்பு நோக்கத்திற்குரியவர்கள் மட்டும் வலம்வருமிடமென்று பேஸ்புக்கினை எண்ணிக்கொள்ளாதீர்கள். எனவே நீங்கள் பேஸ்புக்கில் உங்களைப்பற்றிய தகவல்களை பகிரும் ஒவ்வொருமுறையும் இருமுறை சிந்தியுங்கள். இதில் எதுவும் கட்டாயமில்லை. பரிந்துரைப்பு மட்டுமே.



பேஸ்புக்கில் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

இதனை பேஸ்புக் Privacy Settings என்கிறார்கள். நீங்கள் பேஸ்புக் இல் செய்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் யார் யார் பார்க்க வேண்டும் என்று ஒழுங்குபடுத்துகின்ற பகுதி. இதில் கீழுள்ளது போல 3 பிரதான வகை உண்டு. அதாவது 


  • Only Me, இந்த தெரிவினை கொடுத்தால் குறித்த தகவலை நீங்கள் மட்டுமே காண முடியும்.
  • Friends Only, உங்கள் நண்பர்களோடு மட்டும் தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்த வசதி.
  • Everyone./Public. பேஸ்புக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இணையத்தில் உலாவருகிறவர்களும் காண கூடியவகையில் அதாவது பேஸ்புக்கில் கணக்கு இல்லாத ஒருவராலும் இதனை காணமுடியும்.

மிகவும் கலைக்குரிய விடயமென்னவெனில் Defaultஆக இந்த வசதி Public/Friends Only என்பதில் இருக்கும். தகவல்களை பகிர்வதிலும் புகைப்படங்களை பதிவேற்றுவதில் பலருக்கும் இருக்கின்ற வேகம் அதில் உள்ள இந்த Privacy settings எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பதில் இருப்பதில்லை. எனவே சாதாரண நிலைத்தகவல்கள் தொடங்கி புகைப்படங்கள், Profile Details போன்றவற்றை யார்யாருடன் பகிர வேண்டும் என சிந்தித்து பகிருங்கள். கூடியவரை கணினியிலிருந்து புகைப்படங்களை தரவேற்றுங்கள். நேரடியாக Mobile, Tablet போன்ற சாதனங்களில் இருந்து தரவேற்றுவதை தவர்க்கவும். அதே போன்று இப்போதெல்லாம் Smartphone யுகம். இவற்றில் உள்ள Synchronization என்ற வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். இணைய இணைப்பு இருந்தால் உங்களை அறியாமலே Galleryஇல் உள்ளவற்றை அவை பேஸ்புக் போன்ற தளங்களுக்கு ஏற்றிவிடும். எனவே உங்கள் தேவைக்கேற்ப Sync settingsஐ மாற்றிக்கொள்ளுங்கள். 

அடுத்து உங்கள் நண்பர்களை நிர்வகிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தனிப்பட்ட கணக்கில் ஆகக்கூடியது 5000 நண்பர்களை இணைத்து கொள்ளலாம். இதனை இன்னும் இலகுவாக்குவதற்காக பேஸ்புக் Friend List என்ற வசதியை அறிமுகம் செய்திருந்தது. அதாவது உங்கள் வகுப்பு நண்பர்கள், வேலைத்தள நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் இப்படியாக இன்னும் பல பிரிவுகளில் நண்பர்களை பிரித்துவைத்துக் கொள்ள முடிவதுடன் மேற்சொன்ன Privacy Settings போன்று தேவைப்படும் போது தகவல்களை குறிப்பிட்ட ஒரு Listஇல் உள்ளவர்களோடு மட்டும் பகிரவும் முடியும்.

இவை போன்ற இன்னும் பல வசதிகள் மூலம் எமது Privacyஐ பாதுகாக்க முடியும். இனி வருகின்ற உங்கள் சமூக வலைத்தள உலாவல் அனுபவங்கள் உங்களுக்கும் சமூகத்திற்கும் பயன்தரட்டும்.

Share With your friends