7 ஜூலை, 2010

பீடிஎஃப் ஃபைல்களுக்கு அடோப் அக்ரோபேட் தேவையா??

நாம் தயாரிக்கும் டாக்குமென்டுகளை பகிர்ந்து கொள்ள மிகச்சிறந்தது பீடிஎஃப் ஃபார்மட்டுகள் எனவும் அதன் நன்மைகள் பற்றியும் சென்ற மாத இடுகையில் ஆராய்ந்தோம்.(www.itcornerlk.blogspot.com,,,,,,) அவ் இடுகையில் பிடிஎஃப் ஃபைல்களை வாசிக்க கட்டாயம் Adobe acrobate எனப்படும் மென்பொருள் தேவை
என கூறியிருந்தேன்.அவ்வாறான பிடிஎஃப் ஃபைல்களை எவ்வாறு உருவாக்குவது என நாம் இப்போது ஆராய்வோம்.
இன்றைய கம்ப்பியூட்டர் உலகத்தில் அதுவும் கார்ப்பரேட் உலகத்தில் டாக்குமென்டுகளை பகிர்ந்து கொள்ள எவ்வளவோ ஃபார்மட்டுக்கள் இருந்தாலும் அடோஃப் பீடிஎஃப் தலைசிறந்த ஃபார்மட் என்று கூறினால் அதை மறுக்கமுடியாது.மைக்ரோசாஃப்ட் வேர்ட் டாக்குமென்டுகள் அல்லது எக்சல் ஸ்ப்ரட்ஷீட்கள் போல் அல்லாமல் அடோபின் PDF Formatகள்
Defaultஆக Read-onlyஆக இருக்கும்.அதாவது அதை படிக்கலாமே தவிர எடிட் செய்வது என்பது என்பது முடியாது. டாக்குமென்ட்டை உருவாக்குபவர்/எழுதுபவர் அதிக பாதுகாப்பு வளையங்கள் அமைக்க முடியும்.அவர் அனுமதி இல்லாமல் அந்த பிடிஎஃப் ஃபைலை பிரின்ட் எடுக்கவோ அல்லது டெக்ஸ்ட் மற்றும் இமேஜ்களை எடுப்பது என்பது இயலாது.
வேறு ஒரு வழியும் உண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த டாக்குமென்டை மறையச் செய்யும்படி Configer செய்யவும் முடியும்.மேலும் ஒரு சிறப்பு அம்சமாக நீங்கள் நீங்கள் அனுப்பிய அந்த டாக்குமென்டு அனுப்பியவருக்கு கிடைத்தவுடன் அவர் அதைத்திறந்தால் நீங்கள் அந்த டாக்குமென்டை வடிவமைத்தபடி அப்படியே சற்றும் மாற்றமடையாமல்
இருக்கும்.Font,formating style,Layout எல்லாமே அந்த பிடிஎஃப் ஃபைலில் பாதுகாக்கப்படும்.அந்த பிடிஎஃப் டாக்குமென்டு ஒரு விசியோ Flowchartலிருந்து தயாரிக்கப்பட்டிருந்தாலோ அல்லது மைக்ரோசாஃப்ட் வேர்ட் டாக்குமென்டுகள் அல்லது எக்சல் ஸ்ப்ரட்ஷீட்கள் போன்றவற்றில் தயாரிக்கப்பட்டிருந்தாலோ இலவசமாக கிடைக்கும் அடோப்ரீடர்
அல்லது ஃபாக்ஸ்இட் (Foxit) மூலம் டாக்குமென்டை திறந்து பார்க்கலாம்.

எமது ஆவணங்களை பிடிஎஃப் ஃபைலாக மாற்றுவது எப்படி???
அடுத்த இடுகையில் எதிர்பாருங்கள்........

CONCEPTE BY
A.SHANOJAN
SHANOJAN1993@YAHOO.COM

கருத்துகள் இல்லை:

Share With your friends